• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள் நடத்தப்படும்

November 1, 2016 தண்டோரா குழு

திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம், அந்த அணியின் தலைவர் இள.புகழேந்தி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கட்கிழமை(அக்.31) நடந்தது.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.ஆர்எஸ்எஸ் உணர்வாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் நகல், மறைமுக குலக்கல்வி திட்டம் போல உள்ளது. இதை திமுக மாணவரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள் நடத்தப்படும். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகு போராட்டங்களும் நடத்தப்படும்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் பராமரிக்காமல் உள்ள தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த நிலை தொடர்ந்தால் திமுக மாணவரணி மக்கள் திரள் போராட்டங்களை நடத்தும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மேலும் படிக்க