• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் பழனிசாமி

August 25, 2018 தண்டோரா குழு

கேரள மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு,தமிழக முதலமைச்சர் கேரள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியில்,

“திருவோணப் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வரலாறு காணாத கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பாசத்தோடும்,நேசத்தோடும்,தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததுடன்,பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அரிசி,பால் பவுடர்,ஆடைகள்,போர்வைகள்,மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

மேலும்,சகோதர உணர்வுமிக்க தமிழ்நாடு மக்களிடமிருந்து பலகோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு கேரள மாநிலத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் அப்பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து,விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிட தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க