November 1, 2018 தண்டோரா குழு
பிரிமியம் ரயில் என்றழைக்கப்படும் பல்வேறு சொகுசு மற்றும் குளிர்சாதன வசதிகள் கொண்ட ரயில்களின் கட்டணங்களை பாதியாக குறைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ராஜதானி,துரந்தோ,சதாப்தி போன்ற சொகுசு ரயில்களின் கட்டணம் சில சமயங்களில் விமானங்களின் கட்டணங்களை விட அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.இதனால் சுமார் 100 ரயில்களின் கட்டணத்தை பாதியாக குறைப்பது என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
ரயில் புறப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்பு முன்பதிவு செய்தால் காலியாக உள்ள இடங்களுக்கு இந்த கட்டணச் சலுகையைப் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் 40 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளுடன் செல்லும் ரயில்களிலும் 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.விரைவில் இந்த கட்டணக் குறைப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.