• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளர் குறித்து அறிவிப்போம் – டி.டி.வி. தினகரன்

August 7, 2018

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளர் குறித்து அறிவிப்போம் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

“திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அதிலிருந்து வெளியேறினால்,அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து சிந்திப்போம். திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து வரும் தகவல்கள் தனக்கு கவலை அளிப்பதாகவும், அவர் முழு உடல் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் 8 வழிச்சாலைத் திட்டம் தேவையற்றது. இயற்கை வளங்களை அழிக்கும் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து போராடும்”. என்று கூறினார்

மேலும் படிக்க