• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாய்லாந்தில் புத்த துறவிக்கு 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை

August 10, 2018 தண்டோரா குழு

தாய்லாந்து நாட்டில் புத்த துறவிக்கு 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாங்காக் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்த துறவி வைராபோன் சுக்போன்(39).சில ஆண்டுகளுக்கு முன், உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை அமைப்பதாக கூறி,பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக பெற்று மோசடி செய்ததாக அவர் மீது புகார்கள் பதிவாகின.

மேலும்,சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து போலீஸாரிடம் ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கானது, பாங்காக் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்,அவருக்கு 114 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க