• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடதமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

September 19, 2018 தண்டோரா குழு

வடதமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் 19, 20 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஆந்திரா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு 19, 20, 21 ஆகிய தேதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே சென்னையில் ராயப்பேட்டை,மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி,புழல்,கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.இதேபோல் புதுச்சேரியில் தவளக்குப்பம்,திருக்கனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய காற்றுடன் கனமழை பெய்தது.

மேலும் படிக்க