August 11, 2018
தண்டோரா குழு
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் குமரி,நெல்லை,கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள குமரி,கோவையில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.குமரி மாவட்டத்தில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.