• Download mobile app
26 Dec 2025, FridayEdition - 3607
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை – மோகன் நவாஸ் ஏ.டி.எஸ்.பி

September 22, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை எனவும்,வெளியாட்களின் நடமாட்டத்தை அறிந்து தகவல் கொடுத்து வரும் மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல் துறை சார்பில் செய்யப்பட்டு வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவாமல் இருக்க தமிழக சிறப்பு அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் இணைந்து பணியாற்றி வருவதாகவும்,இதற்கு முக்கியப் பங்காற்றி வரும் மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகக் கூறினார்.வெளியாட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக மலைவாழ் மக்களிடம் இருந்து,தகவல்கள் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.மேலும் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் படிப்பிற்கு தேவையான வசதிகளையும் செய்து தருவதாக தெரிவித்தார்.நக்சல் தடுப்பு நடவடிக்கைக்கு மலைவாழ் மக்கள் ஒத்துழைப்பாக உள்ளதாகவும்,காவல் துறையினரும் சோதனை சாவடிகள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.குறிப்பாக தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை என தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க