November 30, 2018
தண்டோரா குழு
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுவதால்,அந்த பொறுப்பிற்கு அபய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றும் பொன் மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை)ஓய்வுபெறுகிறார்.இதையடுத்து,அவர் வகித்த ஐ.ஜி.
பதவி ஏடிஜிபியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு அபய்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இப்போதுதான் இந்த பதவி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.அபய்குமார் சிங் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.