• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது என காட்டிய ஆர்வத்தை ஸ்டெர்லைட் வழக்கில் காட்டவில்லை– கனிமொழி

August 10, 2018 தண்டோரா குழு

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது என காட்டிய ஆர்வத்தை தமிழக அரசு ஸ்டெர்லைட் வழக்கில் காட்டவில்லை என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்

இதுகுறித்து கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில்,

“வேதாந்தா நிறுவனம்,அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.மே22 அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு,தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.

வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில்,மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில்,முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால்,இதற்கான ஆலோசனை வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில்,அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது.ஏன் தாமதம் என்றால்,சி.எஸ்.வைத்தியநாதன் தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று,சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.

கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால்,இத்தோல்வி நிகழ்ந்திருக்காது.எடப்பாடி பழனிச்சாமி,வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்”.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க