September 7, 2018
தண்டோரா குழு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது.இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் கூறியது.இதற்கடையில்,முதல்வர் பழனிசாமி அமைச்சரவையைக் கூட்டி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலையில் உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாகவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.