• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடைத்தேர்தல் நடத்துவதை விட சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் – ப.சிதம்பரம்

October 25, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில்,20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட,சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.மேலும்,சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும் தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட,சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

இன்றைய உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது.18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க