• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் 3 மாதத்திற்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் – அமைச்சர் பாண்டியராஜன்

September 25, 2018 தண்டோரா குழு

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் 3 மாதத்திற்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.கோவையில் உற்பத்தி திறன் குழு அமைப்பின் 60 ஆம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்,

“நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 5 கோடி ரூபாய் வரை குறைந்த வட்டியில் முதலீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதாகவும்,இதற்காக 1000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில் 750 விண்ணப்பங்கள் மட்டுமே ஆண்டுக்கு பெறப்படுவதாகவும் தெரிவித்தார்.பயனாளிகள் கண்டறிவதில் சிரமம் இல்லை என்றாலும் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுவதால் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும்.ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் 3 மாதத்திற்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும்,அதற்கான முழு தொகையும் கடந்த மார்ச் மாதமே செலுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.மேலும்,முதலமைச்சரின் உத்தரவுப்படி மலாய்,யாழ்பாணம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் ஆய்வறிக்கைகளை துவங்குவது தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் மட்டத்தில் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க