• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை செல்லும் நெடுஞ்சாலைகளில் வேகம் அளக்கும் கருவி அமைப்பு. ஓட்டுனர்கள் எச்சரிக்கை.

August 29, 2016 தண்டோரா குழு

சென்னை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக வந்து அடிக்கடி விபத்தில் சிக்குவதால் வரும் வாகனங்களின் வேகத்தை அறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து சென்னை நோக்கி வரும் நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் லேசர் வேகக்கருவி பொருத்தப்பட்டது.கடந்த சில நாட்களாக ஒத்திகை பார்க்கப்பட்ட பின் இன்று முதல் அந்தக் கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இந்தக் கருவி மூலம் ஒரு வாகனம் 100 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் 400 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மீண்டும் அதே தவறை செய்தால் இரண்டாவது முறைக்கு 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த அபராதங்கள் முழுவதும் வேகத்தைத் தொட்ட இடத்திற்கு அடுத்த சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னையை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளும்,அங்கிருந்து வருபவர்களும் மிகவும் எச்சரிக்கையாக வாகனத்தை ஒட்டவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க