• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக உடைக்க சதி நடக்கும் அதற்கு இடம் கொடுக்க கூடாது – நடிகை விஜயசாந்தி

December 17, 2016 தண்டோரா குழு

அதிமுக பிரிக்க சதி நடக்கும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளரும் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையெடுத்து அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

அங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், ஜெயலலிதா மரணம் அடைந்த அன்று வந்து இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தி சென்றார்.இந்நிலையில், இன்று மதியம் நடிகை விஜயசாந்தி ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஜெயலலிதாவின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். கட்சியை உடைக்க சதி நடக்கும், அதற்கு இடம் கொடுக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க