• Download mobile app
23 Jun 2025, MondayEdition - 3421
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினிக்கு ரோஷம் வர உப்பு அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்

September 16, 2016 தண்டோரா குழு

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எந்த எதிர்ப்பு குரலும் கொடுக்காத ரஜினிக்கு ரோஷம் வர கோவையில் இந்து மக்கள் கட்சியினர் உப்பு அனுப்பினர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய வணிக சங்கத்தினர் ரயில் மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் நடிகர் ரஜினிகாந்திற்கு ரோஷம் வர உப்பு அனுப்பினர்.

இதற்கு தலைமை தாங்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை தலைவர் கோவிந்தராஜ், கர்நாடகவில் இருந்து வந்து தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக வாழும் ரஜினிகாந்த், “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் ” என்று திரைப்படங்களில் பாடும் அவர் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பு குரலும் கொடுக்கவில்லை.

இதற்காக ரஜினிக்கு ரோஷம் வர வேண்டும் என்பதற்காகவே உப்பு அனுப்புகிறோம் என்றும் அவரோடு சேர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் அனுப்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க