• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதி தமிழ் மக்களைப் போல் உறுதிமிக்கவர் – ராகுல் காந்தி

July 31, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.இதையடுத்து,கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வரவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்தடைந்தார்.பின்னர்,சென்னை விமான நிலையத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த ராகுல் காந்தி கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.அவருடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,

“திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்தேன்.அவர் நன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.அவரது உடல்நிலை சீராக உள்ளது.கருணாநிதி இயல்பிலேயே போராட்ட குணமிக்கவர். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று சோனியாகாந்தி தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளார்.கருணாநிதி தமிழ் மக்களின் உத்வேகமாக இருந்து வருகிறவர்.கருணாநிதி காங்கிரசுடன் நீண்டகாலமாக நட்புறவு கொண்டுள்ளவர்.கருணாநிதி தமிழ் மக்களைப்போல் உறுதி மிக்கவர்”. எனக் கூறினார்.

மேலும் படிக்க