• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கத்தார் அரசு அறிவித்த நற்செய்தி !

September 6, 2018 தண்டோரா குழு

கத்தார் நாட்டில் பணி புரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இனி தங்கள் நாட்டிற்கு செல்ல விசா தேவையில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.எனினும் கத்தாரில் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த காரணங்களுக்காக தங்களது நாடுகளுக்கு செல்வதற்கு கூட பல்வேறு விசா கட்டுபாடுகள் இருந்தன.இந்நிலையில்,இந்த நடைமுறையில் கத்தார் அரசு புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி கத்தாரை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்கள்,இனி அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கத்தாரில் வசிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும்,2022ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டிகள் கத்தரின் தோஹா நகரில் நடக்கவுள்ள நிலையில்,இதனை கருத்தில் கொண்டு தான் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும் படிக்க