November 26, 2018
தண்டோரா குழு
பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த காவலர்களுக்கு தடை விதித்து டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.பணியில் ஈடுட்டிருப்பவர்கள் அதிகஅளவு நேரத்தினை தங்களதுசெல்போனில் வாட்ஸப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் நேரம் செலவிடுவதாக பரவலாக புகார்கள் தமிழகஅரசுக்கும், காவல்துறை தலைமைக்கும் சமீப காலங்களில் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து,காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து டிஜிபி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,
“முக்கியமான நேரங்களில் காவலர்கள் செல்போனில் மூழ்கி உள்ளனர்.உதவிஆய்வாளர் பதவிக்குமேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம்.சட்டம் ஒழுங்கு,விவிஐபி,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதும் செல்ஃபோன்களை பயன்படுத்தக்கூடாது.செல்ஃபோன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது,தடை விதிப்பது தொடர்பாக அந்தந்த பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பாதுகாப்பு பணியிலுள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன”.