• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த காவலர்களுக்கு தடை : டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை

November 26, 2018 தண்டோரா குழு

பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த காவலர்களுக்கு தடை விதித்து டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.பணியில் ஈடுட்டிருப்பவர்கள் அதிகஅளவு நேரத்தினை தங்களதுசெல்போனில் வாட்ஸப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் நேரம் செலவிடுவதாக பரவலாக புகார்கள் தமிழகஅரசுக்கும், காவல்துறை தலைமைக்கும் சமீப காலங்களில் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து,காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து டிஜிபி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,

“முக்கியமான நேரங்களில் காவலர்கள் செல்போனில் மூழ்கி உள்ளனர்.உதவிஆய்வாளர் பதவிக்குமேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம்.சட்டம் ஒழுங்கு,விவிஐபி,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதும் செல்ஃபோன்களை பயன்படுத்தக்கூடாது.செல்ஃபோன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது,தடை விதிப்பது தொடர்பாக அந்தந்த பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பாதுகாப்பு பணியிலுள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன”.

மேலும் படிக்க