• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் வருகிறது புதிய ஒரு ரூபாய் நோட்டு

November 4, 2016 தண்டோரா குழு

மத்திய ரிசர்வ் வங்கி புதிய 1 ரூபாய் கரன்சி நோட்டை வெளியிடவுள்ளது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய ரிசர்வ் வங்கி புதிய 1 ருபாய் கரன்சி நோட்டுகளைப் புழக்கத்தில் விட உள்ளது. புதிய நோட்டில் H சின்னத்துடன் உட்பொதிந்த L எழுத்துடன், நோட்டின் முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற நிறக் கலவையிலும் இருக்கும்.

9.7x 6.3 செ.மீ., அளவில் அமைய இருக்கும் இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் இருக்கும். இதில் நிதித்துறைச் செயலர் ரத்தன் பி வட்டலின் இரு மொழி கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும்.

எண்களானது நோட்டின் வலது கீழ்ப்புறம் கருப்பு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இவற்றோடு ரூபாயின் மதிப்பானது 15 இந்திய மொழிகளில், மொழிகளுக்கான முகப்பிலும், நோட்டின் மையப் பகுதியின் கீழ்ப்புறம் சர்வதேச எண்ணில் ஆண்டும் அச்சிடப்பட்டிருக்கும்.

புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்த பின்னும், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களும் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க