• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.500 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது- மோடியின் முழு உரை

November 8, 2016 தண்டோரா குழு

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (8.11.16) தில்லியில்நாட்டுமக்களுக்காகஉரையாற்றினார். அப்போதுஅவர் பேசும்போது,

நாட்டில் கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க மத்திய அரசு வரலாற்று சிறப்பு மிக்க திடீர் முடிவை எடுத்துள்ளது, அதன்படி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், ஆகவே இன்று(8.11.16) அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன்அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் கூறினார்.

இதில் முக்கியமாக மக்கள் தங்களிடமுள்ள 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதைபோல், 500,1000 ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் கொடுத்து அதற்கு பதிலாக புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும்,மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு நான் வருந்துகிறேன் எனவும் ஊழலுக்கு எதிரான இந்த போரில் மத்திய அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.

மேலும் படிக்க