• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமுருகன் காந்தி கைது ஏன்? அவர் தேச விரோதமாக என்ன பேசினார் – நீதிபதி கேள்வி

August 10, 2018 தண்டோரா குழு

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன்,அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என தமிழக போலீசிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்தார். இதற்கிடையில்,தமிழக காவல்துறை சார்பில் தேடப்படும் குற்றவாளியாக திருமுருகன் காந்தியை அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து,ஐ.நா மன்றத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருமுருகன் காந்தி விமான மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தார்.அப்போது விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து,தனிப்படை போலீசார் மூலம் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில்,இவ்வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ்,திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தால் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட முடியாது.வேண்டுமானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்கலாம் என நீதிபதி பிரகாஷ் கூறியுள்ளார்.மேலும் திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்? வர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க