October 19, 2018
புதிய செய்தி
மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்படுவதாக அதன் தலைவர் மோகன்லால் அறிவித்துள்ளார்.
கூலிப்படை மூலம் பிரபல மலையாள நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைதாகி,தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இந்த விவகாரத்தில் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
எனினும்,அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டார்.இதை எதிர்த்து,அதில் உள்ள சில பெண் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்நிலையில்,திலீப்பை ராஜினாமா கடிதம் அளிக்கச் செய்ததாகவும்,அதை தாங்கள் ஏற்றுக் கொண்டதால்,இனி மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் அவர் உறுப்பினராக இல்லை எனவும் அதன் தலைவரும்,நடிகருமான மோகன் லால் அறிவித்துள்ளார்.