• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேர்மையான தலைவரை நியமித்து – ‘ரகசிய விசாரணை’ என்ற விதியை ரத்து செய்க” – மு.க.ஸ்டாலின்

November 30, 2018 தண்டோரா குழு

லோக் ஆயுக்தா அமைப்புக்கு நேர்மையான தலைவரை நியமித்து – ‘ரகசிய விசாரணை’ என்ற விதியை ரத்து செய்க” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பு அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது.இந்நிலையில்,லோக்ஆயுக்தா அமைப்புக்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு,”பவர்” இல்லாத லோக் அயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க அரசு இப்போது “பல்” இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.“கமிஷன்” “கரெப்ஷன்” “கலெக்சன்” என்று மெகா ஊழலில் மூழ்கி,கஜானாவைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு,பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் 54 மாதங்கள் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காமல் தூங்கியது.பிறகு உச்சநீதிமன்றம் அரசின் தலையில் ஓங்கிக் “குட்டு” வைத்து,கெடு விதித்த பிறகு வேறு வழியில்லாமல் ஊழலை ஒழிப்பதற்கு எந்த ஒரு வலுவான அதிகாரமும் இல்லாத லோக் அயுக்தா மசோதாவை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற்று,லோக் அயுக்தா மசோதா எத்தகையை உயிரற்ற வெறும் “எலும்புக்கூடாக” இருக்கிறது என்பதை எல்லாம் விளக்கிப் பேசி மசோதாவை பேரவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன்.ஆனால் அதை ஏற்க மனமின்றி அந்த மசோதாவை தடுமாற்றத்தோடு நிறைவேற்ற முயன்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்புச் செய்து “பொம்மை” லோக் அயுக்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அ.தி.மு.க அமைச்சர்கள் மீதோ,முதலமைச்சர் மீதோ எந்தவொரு ஊழல் விசாரணையும் நடத்தி விடாத அளவில் ஒரு லோக் அயுக்தா அமைப்பை உருவாக்கியது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆர்வலர்களுக்கு பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

அப்படிப்பட்ட லோக் அயுக்தாவிற்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல்,தலைவரையும் நியமிக்காமல் அ.தி.மு.க அரசு தாமதம் செய்தது.மீண்டும் உச்சநீதிமன்றம் எச்சரித்தப் பிறகு இப்போது லோக் அயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது.ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும்; புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ,பொதுமக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது;விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள முதலமைச்சர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

லோக் அயுக்தாவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் “தேடுதல் குழு” (Search Committee) உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மாற்றலாம் என்று கொண்டு வரப்பட்டுள்ள விதி,அரசுக்கு விரும்பாத யாரையும் “தேடுதல் குழு” லோக் அயுக்தா அமைப்பிற்கு தலைவராகவோ,உறுப்பினராகவோ பரிந்துரை செய்து விடக்கூடாது என்ற இழிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கும்,ஊழல் ஒழிப்பு பணியிலும் ஈடுபட வேண்டிய லோக் அயுக்தா அமைப்பு ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் அ.தி.மு.க அரசின் கேடு கெட்ட நடவடிக்கை மட்டுமல்ல – ஊழலே எங்கள் வாழ்க்கையாக இருக்கும் போது நாங்கள் எப்படி அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போல் அமைந்துள்ளது.ஆகவே,லோக் அயுக்தா அமைப்பிற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும்,ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொதுமக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் “ரகசிய விசாரணை” என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன்,லோக் அயுக்தா அமைப்பை ஒரு “காகிதப்புலி” போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க