• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் இன்று திடீர் முழுஅடைப்பு போராட்டம் !

November 17, 2018 தண்டோரா குழு

கேரளா முழுவதும் இன்று (நவ.,17) திடீர் முழு அடைப்பு போராட்டத்திற்கு சபரிமலை கர்மா சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.இதற்கிடையில்,ஐக்கிய வேதி அமைப்பின் மாநில தலைவி சசிகலா(56) நேற்று (நவ.,16) இரவு சபரிமலைக்கு அய்யப்பனை தரிசனம் செய்ய சென்றார்.

ஆனால்,இரவில் செல்ல வேண்டாம் என போலீசார் அவரை மரக்கூட்டம் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.இதனால் சசிகலா அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து,சசிகலாவை கைது செய்த போலீசார்,அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்நிலையில்,சசிகலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இந்து ஐக்கிய வேதி,பா.ஜ.,மற்றும் இந்து அமைப்புக்கள் சார்பில் இன்று திடீர் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கன்னியாகுமரியிலிருந்து செல்லும் பேருந்து களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க