• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

September 24, 2018 தண்டோரா குழு

கேரளாவில் வரும் 25,26-ம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் அண்மையில் பெய்த கனமழையால் அந்த மாநிலமே நிலைகுழைந்தது.கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.இந்நிலையில் கேரளாவில்,சில மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கைக்கான “யெல்லோ அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. செப்.25 மற்றும் 26 ஆகிய நாட்களில் 64.4 மில்லி மீட்டரில் இருந்து 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும்,நாளை கேரளாவின் பத்தினம்திட்டா,இடுக்கி,வயநாடு மாவட்டங்களுக்கு 2ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அதைபோல், நாளை மறுநாள் பாலக்காடு,இடுக்கி,திருச்சூர்,மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க