• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பிரதமர்

August 18, 2018 தண்டோரா குழு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே,கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் தங்களின் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக,பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார்.அவரை ஆளுநர் சதாசிவம்,முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி சென்ற அவர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்ளவிருந்த நிலையில் கொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆய்வை ரத்து செய்த பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க