• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவின் நிலை மிகுந்த வலியை அளிக்கிறது – ராகுல்காந்தி

August 16, 2018 தண்டோரா குழு

கேரள வரலாற்றிலேயே இந்த பேரழிவு ஈடுகட்ட முடியாத ஒன்று என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட்9ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் கனமழையால் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.கனமழையால் கேரளா முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதையடுத்து,பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் நிலை மிகுந்த வலியை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“கேரள வரலாற்றிலேயே இந்த பேரழிவு ஈடுகட்ட முடியாத ஒன்று.கேரளாவின் நிலை மிகுந்த வலியை அளிக்கிறது.கேரளாவிற்கு சிறப்பு நிதியுதவி அளிக்கவும்,மீட்புப் பணிகளுக்கு ராணுவம்,கடற்படை வீரர்களை அதிகளவில் அனுப்பவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க