August 16, 2018
தண்டோரா குழு
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் கனமழையால் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருக்கின்றனர்.தமிழ்த்திரையுலகினர்
சார்பில் நடிகர்கள் கமல்,விஷால்,நடிகை ரோஹிணி,ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.அதைபோல் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் கேரள மக்களுக்காக 25 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில்,இன்று திருவனந்தபுரம் சென்ற நடிகர் கார்த்தி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் 25 லட்சம் ரூபாக்கான காசோலையை வழங்கினார்.