• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனமழையால் கேரளாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு 28ம் தேதி வரை விடுமுறை

August 17, 2018 தண்டோரா குழு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடுக்கி அணை,திறந்துவிடப்பட்டதால் கேரளாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.தேசிய பேரிடர் மீட்பு படை,ராணுவம்,கடற்படை,விமானப்படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில்,வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை,கேரளாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க