• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிய 5 வயது சிறுமி – தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து

August 1, 2018 தண்டோரா குழு

கேரளாவில் ஐந்து வயது சிறுமி இருசக்கரவாகனம் ஓட்டியதால்,தந்தையின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொச்சி அருகேயுள்ள நெடுஞ்சாலையில் ஒருவர் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது தனது ஐந்து வயது மகளை இருசக்கர வாகனம் ஓட்ட அந்த நபர் அனுமதித்துள்ளார்.அந்த சிறுமி வாகனம் ஓட்ட,அவளுடைய தந்தை,தாய் மற்றும் சகோதரி அதில் பயணித்தனர்.இந்த காட்சியை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியதால் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து,வாகனத்தின் பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிபு பிரான்சிஸ் என்பவர் தனது ஐந்து வயது மகளை வாகனம் ஓட்ட வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்,அவரது ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.மேலும்,சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தான் தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க