August 1, 2018
தண்டோரா குழு
கேரளாவில் ஐந்து வயது சிறுமி இருசக்கரவாகனம் ஓட்டியதால்,தந்தையின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொச்சி அருகேயுள்ள நெடுஞ்சாலையில் ஒருவர் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது தனது ஐந்து வயது மகளை இருசக்கர வாகனம் ஓட்ட அந்த நபர் அனுமதித்துள்ளார்.அந்த சிறுமி வாகனம் ஓட்ட,அவளுடைய தந்தை,தாய் மற்றும் சகோதரி அதில் பயணித்தனர்.இந்த காட்சியை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியதால் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து,வாகனத்தின் பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிபு பிரான்சிஸ் என்பவர் தனது ஐந்து வயது மகளை வாகனம் ஓட்ட வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்,அவரது ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.மேலும்,சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தான் தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.