November 27, 2018
தண்டோரா குழு
கஜா புயல்தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.உயிர் சேதமும்,பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.இதையடுத்து,தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து,கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தனியார்,அரசு சாரா நிறுவனங்கள் தனி நபர்கள்,திரைப்பிரபலங்கள் என பலரும் புயயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில்,சன் நெட்ஒர்க் நிறுவனமும் நிவாரண நிதியாக ரூ 2 கோடியை அளித்துள்ளது.சன் குழுமத்தின் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து இதற்கான காசோலையை வழங்கினர்.அதைபோல் நடிகர் விஷ்ணு விஷால் முதல்வர் நிவாரண நிதிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.