November 28, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக,ரயில் மூலம் இன்று காலை நாகப்பட்டினத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றடைந்தார்.
அம்மாவட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
பின்னர்,புயலால் வீடுகளை இழந்தவர்கள், கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகளையும்,தென்னைகளை இழந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.அவ்வேளையில் பொதுமக்களிடன் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி,
“நாகை மாவட்டத்தில் கஜா புயல் மிகக் கடுமையான அளவில் சேதாரங்கள்,பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.இப்பதிப்பில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.15 போ் உயிரிழந்துள்ளனர்.400 மேற்பட்ட முகாம்களில் 2 லச்சதிறக்கும் மேர்பட்டோர் தங்கவைகப்படுள்ளனர்.300க்கும் அதிகமான பேரிடா் மீட்புப்படை வீரா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா்.கஜா புயலால் வீடுகளை இழந்தவா்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.அரசை பொறுத்தளவில் பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம்.மத்திய அரசும் கருணையோடும்,மனிதாபிமானத்தின் அடிப்படையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்” என்று அவா் கூறியுள்ளார்.