• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர்

July 22, 2016 தண்டோரா குழு

கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், தீவிரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டான்.

இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தி இந்தியாவை வம்புக்கு இழுத்தது. மேலும் துக்கம் அனுசரித்தும், அவனது பலி குறித்து காஸ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் இந்தியாவின் பொறுமையை சோதித்து வருகிறது. இதன் மூலம் அங்குக் கலவரங்களை தூண்டி அதில் நன்மை காணலாம் என பாகிஸ்தான் அரசு நினைக்கிறது.

இதற்கு உடந்தையாக இருந்த சில அமைப்புகள் அங்குக் கலவரத்தில் ஈடுபட்டன. இந்தக் கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

இன்றுவரை 14 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்யவுள்ளார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க