• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு..

January 22, 2017 தண்டோரா குழு

மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கோரியும், இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைக்க முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை சென்றிருந்தார். ஆனால் அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும் வரை அதனை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்காமல் தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்ப மதுரை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கூறுகையில்“ மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் . தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் நீடித்த நிலையான சட்டம்.,யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது.திங்கட்கிழமை கூடும் தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வந்த அவசரச் சட்டம் சட்டமுன்வடிவாக தாக்கல் செய்யப்படும் ”என்றார்

மேலும் படிக்க