• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணம் வாங்கிக் கொண்டு சீர்திருத்தப் பள்ளியில் சிறுவனைத் தப்ப வைத்த ஊழியர்களை கேமரா காட்டிக் கொடுத்தது

August 1, 2016 தண்டோரா குழு

சில நாட்களுக்கு முன்பு சீர்திருத்த பள்ளியில் பல்லிகளை தின்று விட்டதாகக் கூறி அவனைச் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனை வாசலில் தங்களை தாக்கி விட்டு சரத்குமார் தப்பிச் சென்று விட்டதாக ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

சரத்குமார் அடிக்கடி தப்பி சென்று விடுவதால் சீர்திருத்த பள்ளி ஊழியர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், காவல்துறையினர், வார்டன் மற்றும் ஊழியர்களுக்குத் தெரியாமல் சீர்திருத்தப் பள்ளியில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.

இந்நிலையில், சரத்குமாரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, சீர்திருத்தப் பள்ளி வார்டன் மற்றும் ஊழியர்கள், ஜன்னல் கம்பியை உடைத்துத் தப்பி செல்வதற்கான வழிகளைச் செய்து காண்பிப்பது, கண்காணிப்பு கேமராவில் தெள்ளத்தெளிவாகப் பதிவாகி இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய குயவர்பாளையத்தை சேர்ந்த வார்டன் ராஜவேலு (42), சீர்திருத்தப் பள்ளி ஊழியரான பாகூர் அருகே குடியிருப்புபாளையத்தை சேர்ந்த பலசுப்பிரமணியன் (36), பாக்கமுடையான் பேட்டையைச் சேர்ந்த சமையல்காரர் சுரேஷ் மற்றும் சீர்திருத்த பள்ளி காவலாளியான மணிவெளியை சேர்ந்த குப்புசாமி (56) ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க