• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் மிக பழமையான போர்க்கப்பலுக்கு பிரியாவிடை

October 24, 2016 தண்டோரா குழு

உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விராட், இந்திய கடற்படை சேவையில் இருந்து விடைபெறுகிறது.

இந்தியக் கடற்படையில் சுமார் 55 ஆண்டுகளும் கடற்படையில் 27 ஆண்டுகளும் பணிபுரிந்த மிக பழமையான விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுகிறது.

கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் விராட் ஓய்வு பெற்றதும் அதை வாங்கி, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஆந்திர மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. அதன் விருப்பத்தை கடற்படை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் விராட் ஞாயிற்றுக்கிழமை மும்பை துறைமுகத்தை நோக்கி தனது இறுதிப் பயணத்தை தொடங்கியது. மூன்று இழுவை கப்பல்கள் அதை இழுத்துச் சென்றபோது, இந்திய கடற்படையின் தென்னக கடற்படை கமாண்டர் ’ரியர் அட்மிரல், நட்கர்னி உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் அதற்கு பிரியாவிடை கொடுத்து அதை வழியனுப்பி வைத்தனர்.

மும்பையில் முறைப்படி அதற்கு பிரியாவிடை அளிக்கும் விழா நடத்தப்படும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க