• Download mobile app
21 Apr 2026, TuesdayEdition - 3723
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் – இந்தியா

November 8, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க ஐ.நா., கால தாமதம் செய்வதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியா ஐ.நா.,வை வலியுறுத்தியது. ஆனால், மசூத் அசாருக்கு தடை விதிக்க சீனா முட்டுக்கட்டை போட்டது.

இதற்கு சில விதிமுறைகளை காரணம் கூறியது. இதற்கான காலக்கெடு, செப்டம்பர் மாதத்துடன் முடிந்த நிலையில், இந்தியாவின் முயற்சிக்கு தடை விதிக்கும் வகையில், சீனா மேலும் 3 மாதம் காலக்கெடு கோரியுள்ளது.

இந்நிலையில் ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் சையத் அக்பரூதீன் பேசியதாவது:

பயங்கரவாதத்திற்கு எதிரான நமது முயற்சிகளை பயங்கரவாதிகள் தினசரி சீரழிக்கின்றனர். பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட அமைப்பின் தலைவருக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்ய, ஐ.நா., 9 மாதம் கால அவகாசம் வழங்குகிறது.

தற்போதுள்ள சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மனித நேய உதவிகளை செய்ய தவறியது, பயங்கரவாத பிரச்னை, அமைதி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை.

இதனால், பல முக்கிய பிரச்னைகளில், சர்வதேச சமூகம் விலை கொடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சிரியா விவகாரத்தில் தடை விதிக்க வேண்டும். அமைதி நடவடிக்கை எடுக்க வேண்டிய தென் சூடான் பிரச்னையில் நடவடிக்கை இல்லை. இது குறித்து முடிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

மேலும் படிக்க