• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் – ஹபீஸ் சயீத்

November 8, 2016 தண்டோரா குழு

காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் என்று லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, ஜமா-உத்-தவா ஆகிய அமைப்புகளின் தலைவராக உள்ளவர் ஹபீஸ் சயீத். மும்பை தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் ஹபிஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவதுடன், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜமா-உத்-தவா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் பல்வேறு வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு ஹபீஸ் சயீத் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஹபீஸ் சயீத் பேசியதாவது,

நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தப் போகிறோம்., காஷ்மீரில் தான் அந்த தாக்குதல் நடத்துவோம். இத்தாக்குதல் உலகத்தால் ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும் ஆனால் இந்தியா நடத்திய தாக்குதல் போல் இருக்காது காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு மென்மையாக நடந்து கொள்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க