• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம்

September 19, 2018 தண்டோரா குழு

பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சிறந்த சிந்தனையாளராக,சமூகப்புரட்சியின் வழிகாட்டியாக,புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராக,பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்ட தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்பட்டது.இதையடுத்து, சென்னை,அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இதற்கிடையில்,அப்போது அங்கு வந்த கிண்டி,ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார்.இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

இதையடுத்து,ஜெகதீசனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.இந்நிலையில்,பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க