• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகுமார் அஸ்தி இன்று கரைப்பு – பாதுகாப்பு தீவிரம்

September 27, 2016 தண்டோரா குழு

இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் நாளை கரைக்க உள்ளனர்.

இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு துடியலூர் மயானத்தில் தகனம் செய்யப்ட்டது. எனினும், இறுதி ஊர்வலத்தின் போது ஒரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், துடியலூர் பகுதியில் இரு கடைகள் மற்றும் காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில், சசிகுமார் அஸ்தி கரைக்கப்படவுள்ளது. இதனால் இன்று கோவையில் ஏதேனும் பதற்ற சூழல் உருவாகுமா? அல்லது இந்து முன்னணி சார்பில் பந்த் ஏதேனும் அறிவிப்பட்டுள்ளதாக என்ற குழப்பத்தில் பொதுமக்கள் உள்ளனர். இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் கிளம்பி வருகின்றது.

இதுகுறித்து இந்து முன்னணி கோவை மாவட்ட வடக்கு செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக் கூறும்போது,இன்று நடைபெறவுள்ள சசிகுமார் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் கடையடைப்பு பந்த் நடப்பதாக விஷமிகள் தவறாக தகவலை பரப்பி வருகிறார்கள். இது முழுக்க வதந்தியே யாரும் நம்ப வேண்டாம் என்றும், இன்று சசிகுமார் குடும்பத்தினர் மட்டும் பேரூரில் சடங்குகள் நடத்த உள்ளனர். பின்னர், சாடிவயலில் அவரது அஸ்தி கரைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும்,மற்ற அமைப்பினர் யாரும் சூழ்நிலை காரணமாக கலந்துக் கொள்வதில்லை சில விஷமிகள் இன்று ஊர்வலம்,கடையடைப்புக்கு பந்த் அழைப்பு விடுவித்தாக பல புரளிகளை பரப்புகிறார்கள். இன்று இந்துமுன்னணி சார்பில் எந்த நிகழ்ச்சியும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

அதைபோல் இன்று எந்த விதமான பந்த் மற்றும் கடையடைப்பு எதுவும் கிடையாது என்றும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும் முழு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க