• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூலப்பொருட்களைத் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு மின்சாரமே பெரிய செலவு – ஷோரப்ஜி

September 24, 2018 தண்டோரா குழு

மூலப்பொருட்களைத் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு மின்சாரமே பெரிய செலவு என்று இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குனர் ஷோரப்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கத்தின் 20வது ஆண்டுவிழா கூட்டம் செப் 22ம் தேதி கோவையில் நடைபெற்றது.இதில் இந்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குனர் ஷோரப்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

“மின்சாரமே தொழிற்சாலைகளுக்கு இரண்டாவது மிகப் பெரிய செலவாக உள்ளது.மின்சார சிக்கனத்தை பயன்படுத்துவதே செலவை குறைக்க மிகச்சிறந்த வழி.
உலக அளவில் பெரிய தொழிற்சாலைகள் மின்சாரத்தை சிக்கனமாக கடைப்பிடிக்கின்றன.சூரிய மின் சக்தியை பயன்படுத்துவதன் மூலமாக கார்பன் வெளியீட்டையும் கணிசமாக குறைக்க முடியும்.பெங்களூர் விமான நிலையம் சூரிய மின் சக்தியை பயன்படுத்துகிறது.” என்றார்.

மேலும் படிக்க