• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வறட்சி நிவாரணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

February 1, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வங்கிக்கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்தாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் ஜனவரி 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வரப்பட்ட சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது.

புதன்கிழமை (பிப்ரவரி 1) கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தனி அதிகாரிகளின் பணிகாலம் ஜூன் 30 -ம் தேதி வரை நீட்டிப்புக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன் பின், மத்திய அரசாங்கம் கொண்டு வந்த நீட் தேர்விற்கு தமிழகத்தில் தடை விதித்து ,மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர பழைய முறையையே பின்பற்றப்படும் என தமிழக அரசாங்கத்தால் கொண்டு வந்த சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து பருவமழை பொய்த்த காரணத்தினால் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக விரைவில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மேலும் படிக்க