• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முழு உடல் நலத்தோடு இருக்கிறேன் – வைரமுத்து

December 7, 2016 தண்டோரா குழு

அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மை இல்லை. தான் முழு உடல் நலத்தோடு இருப்பதாக கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலமானார். அவரை அடுத்து அப்பல்லோவில் இருந்த பத்தரிகையாளர் “சோ” எஸ். ராமசாமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகின.

“வைரமுத்துவும் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளார், அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை” என்பது போன்ற செய்தி பரவியது. ஆனால், இதை வைரமுத்து மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் புதன்கிழமை கூறியிருப்பதாவது;

ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.

நான் முழு உடல் நலத்தோடு இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது. பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம். என் மீது அன்பும், அக்கறையும் கொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க