September 21, 2018
தண்டோரா குழு
இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதில் முதுநிலை நீரிழிவு நிபுணர் பாலமுருகன் மற்றும் முதுநிலை இதயவியல் நிபுணர் வைத்தியநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு இதயநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான கருத்துக்களை தெரவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,
“உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இருதய நோயால் தங்களது இன்னுயிரை இழப்பதாக கூறுகிறார்கள்.அதில் 75 லட்சம் பேர் மாரடைப்பாலும் 67 லட்சம் பேர் வாத நோயாலும் இறக்கின்றனர்.இளம் வயதில் ஏற்படும் இருதய நோய்கள் புகைப் பழக்கம்,கட்டுப்பாடில்லாத மதுப் பழக்கம், முட்டை,இறைச்சி,நெய் போன்ற கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுதல்,அளவுக்கு அதிகமான உடல் எடை, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
உலகில் 13 சதவிகித இருத நோயால் ஏற்படும் மரணங்கள் ரத்த அழுத்தத்தாலும்,9 சதவிகிதம் புகைப்பழக்கத்தாலும்,6 சதவிகிதம் நீரிழிவு மற்றும் உடற்பயிற்சி இன்மையாலும்,5 சதவிகித மரணம் அதிக உடல் எடையால் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கறுகின்றனர்.எனவே இருத நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ தீய பழக்கங்களிலிருந்து நம்மை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினர்.வாரத்திற்கு இருமுறை அல்லது மூன்று நாட்களாவது எளிதான யோகாசனம் மற்றும் மிதமான உடற்பயிற்சியும் இருதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்”. என மருத்துவர்கள் தெரிவித்தனர்.