• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்

August 28, 2018 தண்டோரா குழு

தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினையும்,பொருளாளராக துரைமுருகனையும் கட்சியின் பொதுச்செயலாளா் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்தாா்.திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“கருணாநிதியின் மகன் என்பதைவிட அவரது தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு கொண்டவனாக இருக்கிறேன்.நான் கருணாநிதி இல்லை,அவர் போல் எனக்கு பேசத் தெரியாது,பேசவும் முடியாது.திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன்.எனது பெரியப்பா பேராசிரியர் அன்பழகன்,பெரியப்பாவிடம் நல்ல பெயர் பெறுவது 200 மடங்கு சமம்.திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை.தமிழகத்தில் சுயமரியாதை கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.முதுகெலும்பில்லாத மாநில அரசை தூக்கி எறிய வா; அழகான எதிர்காலத்தை ஒன்றாக அமைப்போம்.மேலும்,இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்” இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க