• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முக்கொம்பு கதவணையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

September 3, 2018 தண்டோரா குழு

திருச்சி முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் 9 மதகுகள் உடைந்தன.மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதகுகள் உடைந்த பகுதியில் நடைபெறுகின்ற சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

“முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் தான் மதகுகள் உடைந்தன.முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து நீரை திறந்துவிட்டு இருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.மேலும் அளவில்லாமல் மணல் கொள்ளையில் ஈடுபட்டதால் மதகுகள் உடைந்ததாக குற்றம் சாட்டினார்.மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க