• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் – மு.க.அழகிரி

August 30, 2018 தண்டோரா குழு

கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் செப்.5ம் தேதி சென்னையில் பேரணி நடத்த உள்ளார்.இதற்காக மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் மு.க அழகரி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே செப்.5ம் தேதி பேரணி நடைபெறவுள்ளது.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது பற்றி நான் கருத்து கூற ஒன்றுமில்லை என மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என அதிரடியாக மு.க அழகரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க