• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் ஸ்டாலினை சந்திக்க மாட்டேன்- மு.க.அழகிரி

September 3, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நான் சந்திக்க மாட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி,சென்னையில் வருகிற 5ம் தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.இதற்காக கடந்த வாரம் மதுரையில் தனது தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார் அவரை சந்திப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு சந்திக்க மாட்டேன் என அழகரி பதிலளித்தார்.மேலும்,அமைதி பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள்.5-ந்தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து அப்போது எனது முடிவை தெரிவிப்பேன்”இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க