August 13, 2018
தண்டோரா குழு
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.பின்னர் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.இதனையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்,முக்கிய பிரபலங்கள்,திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன்;அது இப்போது தெரியாது.கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் என்பக்கமே உள்ளார்கள் இதற்கு காலம் பதில் சொல்லும் என்றார்.மேலும்,திமுகவில் நான் இல்லாததால் நாளைய அவசர செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு தெரியாது” என்றார்.