• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியின் அனைத்துவிசுவாசிகளும் என்பக்கமே உள்ளார்கள் – மு.க.அழகிரி

August 13, 2018 தண்டோரா குழு

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.பின்னர் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.இதனையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்,முக்கிய பிரபலங்கள்,திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன்;அது இப்போது தெரியாது.கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் என்பக்கமே உள்ளார்கள் இதற்கு காலம் பதில் சொல்லும் என்றார்.மேலும்,திமுகவில் நான் இல்லாததால் நாளைய அவசர செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு தெரியாது” என்றார்.

மேலும் படிக்க